states

img

ரஜோரியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு யார் பொறுப்பு?

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல் வரும் ஜம்மு- காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவும் ரஜோரி தீவிர வாதத் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். “ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தற்போதைய பாஜக அரசு சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் தீவிர வாதம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. ஜம்மு - காஷ் மீரில் இன்னமும் தீவிரவாதம் முடி வுக்கு வரவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.  மேலும், “மோடியும், பாஜகவும் சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறு கின்றனர். ஆனால் நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு, விவாதம் செய்வதற்கு கூட அவர்கள் அனுமதிப்பதில்லை” என்று குறிப் பிட்டுள்ள பரூக் அப்துல்லா, இந்தியா என்பது பன்முகம், பல மொழி, பல் வேறு மதங்களைக் கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு இந்தியா. இங்கு ஒரே நாடு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஒன்றுபட்ட இந்தியாவையே நாங்கள் விரும்புகின்றோம். பிளவுபட்ட இந் தியா எங்களுக்கு தேவை இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.